<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.4.22

சுபஸ்ரீ சித்தி விநாயகர் போற்றி 

 சித்தி விநாயகா

         சீக்கிரம் கண்திறவாய்

உத்தமர் வாழ்ந்திட       

       உறுதுணையாய் நீஇருப்பாய்

தத்துவப் பொருளே

          தாய்க்குத் தலைமகனே

எத்திசையும் போற்றும்

          ஏந்தலே வணங்குகிறேன்.


நல்லவர் வாழ்வு

             நலம்பெற்று உய்ந்திட

அல்லவரை அடக்கிவை

            அனைத்தும் அறிந்தவனே

சத்தியம் ஜெயித்திட

              சடுதியில் நீவருவாய்

நித்தமும் உனைத்தொழ

             நீஎனக்கு அருள்தருவாய்.

                                             -ஆச்சிமகன்


கற்பகத் தருவே,

கண்கணட தெய்வமே,

பொற்பதம் பணிவேன்!

புகழுடன் வாழ்விப்பாய்!


உன்னருள் நிறைந்திருக்க

உள்ளத்தில் மகிழ்விருக்கும்

இன்றைக்கும் என்றைக்கும்

இருளகன்று ஒளிபிறக்கும்!


அச்சத்தை அகற்றிவிடு!

அகத்துணிவைக் கூட்டிவிடு!

உச்சத்தை நானடைய

உன்னருளால் ஏற்றிவிடு!


கேட்டவர்க்குக் கேட்டதெலாம்

கிடைப்பதற்கு அருள்பவனே!

கூட்டுக உன்னருளை

குளிர்விப்பாய் என்மனதை!


ஆச்சிமகன்




| (1) விரிவான மறுமொழி

நான் எழுதிய திருமண வாழ்த்துக் கவிதைகள்  

 என் மகனின் நண்பர் நடேசன் நித்யா திருமண விழாவிற்கு நான் எழுதிய வாழ்த்து.....


நற்பண்பு மிக்கவனே நற்குணங்கள் கொண்டவனே 


அற்புத மாமனிதா

 அருமைமிகு நடேசா!


 உந்தன் மணநாளில்

 உளமாற வாழ்த்துகிறேன்!


நித்தியா எனும் நங்கை

 நிறைவாய் உன் கரம்பிடித்தாள் 


உத்தம வாழ்வு பெற்று

 உயர்ந்தோங்கி வாழியவே!


வேண்டியதெல்லாம் பெற்று

விருப்பங்கள் நிறைவேறி


அன்புடைய சுற்றமும்

அருமைநண்பரும் வாழ்த்த


எல்லையிலா இன்பத்தில்

 இருவரும் வாழ்க! வாழ்க !


- ஆச்சிமகன்


திருமண வாழ்த்து


மணமகன்: கௌசிக்


மணமகள்: பிருந்தா


நல்லறம் தழைக்க நாளும்

நலமெலாம் பொழிக! இன்று

இல்லறம் ஏற்கும் நீங்கள்

இன்புற்று நெடிது வாழ்க!


வல்லவன் இறைவன் உம்மை

வாழ்வெலாம் காத்துக் கொள்க!

நல்லவன் வாழ்த்து கின்றேன்

நானிலம் போற்ற வாழ்க!


செல்வங்கள் யாவும் பெற்று

சிந்தையில் நிறைவே கொண்டு

உள்ளத்தால் இணைந்த நீங்கள்

உலகையே வெற்றி கொள்க!


அன்புடன் வாழ்த்தும்

ஆச்சிமகன்


என் மகனின் நண்பரது திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்துக் கவிதை.....


மங்கல நன்னாளில்

மணமுடிக்கும் நன்மக்கள்

பொங்கும் மகிழ்வோடு

புகழ்பெற்று வாழியவே!


அன்புடைய சுற்றத்தார்

அரும்பெரும் நண்பர்களும்

உங்களை வாழ்த்தட்டும்

உயர்ந்தோங்கி வாழியவே!


பேறுகள் பதினாறும்

பெருமைகள் பலநூறும்

சேரட்டும்! உங்கள்வாழ்வு

செழிக்கட்டும்! வாழ்த்துகிறேன்!


- ஆச்சிமகன்




| (0) விரிவான மறுமொழி

 நேற்று 06.03.2022 நடைபெற்ற என் மகனின் நண்பர் வருண் - வைஷ்ணவி திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்துக் கவிதை...


திருமண வாழ்த்து.


ஐங்கரன் அருள்புரிய 

ஆன்றோர்கள் வாழ்த்துரைக்க 

மங்கல நன்னாளில் 

மணவிழா காணுகின்றார்.


மணவாளன் வருண்என்பான்

அருங்குணங்கள் பலஉடையான் 

எளிமைக்கு இலக்கணமாய்

எச்செயலும் உவந்துசெய்வான்.


உளவியல் கற்றவளாம்

உன்னதப் பண்புடையாள்

வைஷ்ணவி கரம்பற்றி 

வாழ்விலே உயர்ந்திடுக


பேறுகள் பதினாறும்

பெருமையுடன் பெற்றிடுக

சீர்மிகு இல்வாழ்வை

சிறப்புடனே வாழ்ந்திடுக.

| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?