<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.4.22

சுபஸ்ரீ சித்தி விநாயகர் போற்றி 

 சித்தி விநாயகா

         சீக்கிரம் கண்திறவாய்

உத்தமர் வாழ்ந்திட       

       உறுதுணையாய் நீஇருப்பாய்

தத்துவப் பொருளே

          தாய்க்குத் தலைமகனே

எத்திசையும் போற்றும்

          ஏந்தலே வணங்குகிறேன்.


நல்லவர் வாழ்வு

             நலம்பெற்று உய்ந்திட

அல்லவரை அடக்கிவை

            அனைத்தும் அறிந்தவனே

சத்தியம் ஜெயித்திட

              சடுதியில் நீவருவாய்

நித்தமும் உனைத்தொழ

             நீஎனக்கு அருள்தருவாய்.

                                             -ஆச்சிமகன்


கற்பகத் தருவே,

கண்கணட தெய்வமே,

பொற்பதம் பணிவேன்!

புகழுடன் வாழ்விப்பாய்!


உன்னருள் நிறைந்திருக்க

உள்ளத்தில் மகிழ்விருக்கும்

இன்றைக்கும் என்றைக்கும்

இருளகன்று ஒளிபிறக்கும்!


அச்சத்தை அகற்றிவிடு!

அகத்துணிவைக் கூட்டிவிடு!

உச்சத்தை நானடைய

உன்னருளால் ஏற்றிவிடு!


கேட்டவர்க்குக் கேட்டதெலாம்

கிடைப்பதற்கு அருள்பவனே!

கூட்டுக உன்னருளை

குளிர்விப்பாய் என்மனதை!


ஆச்சிமகன்




|
Comments:
🙏
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?