<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.4.19

என் தாயின் நினைவில்  

எங்கள் அன்னை சாலாச்சி 
எவரும் போற்றும் மாதரசி 
தங்க மக்கள் ஐவரையும் 
தரணிக்கு ஈந்த பேரரசி

ஆணும் பெண்ணும் அடுத்தடுத்து 
அவள் போல் பெற்றவர் யாருமில்லை 
மானம் பெரிதென வாழ்ந்திருந்தாள் 
மக்கள் நலனே நினைத்திருந்தாள்

செல்வ வளமும் கண்டதில்லை 
செருக்குடன் எதையும் சொன்னதில்லை 
அல்லும் பகலும் உழைத்திருந்தாள் 
ஆண்டவனுக்கே பயந்திருந்தாள்

 கள்ளம் கபடம் அறியாமல் 
கண்ணீர் பிறருக்குத் தெரியாமல் 
உள்ளம் தூய்மை குறையாமல்
 உத்தமியாக வாழ்ந்திருந்தாள்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?