<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

3.5.15

பூ……………. தானாக மலரும்! 

ஆமாம் பூ தானாக மலரும். அது மலர்வதற்கான சூழலை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும். பூக்கள் மலர்வதற்கான அனைத்துச் சூழலையும் இயற்கை தன் அருட்கொடையாகவே வழங்கி உள்ளது. அந்தச் சூழலில் குறை ஏதும் இருக்குமானால் அதனைச் செம்மைப்படுத்த முயலலாம். ஆனால் மலர்தல் தானாக நிகழும் நிகழ்வு.
ஆனால் இன்று பூக்களை மலரச் செய்வதற்கான முயற்சிகளில் படித்த சமுதாயம் இறங்கிவிட்டது. தடியால் அடித்துப் பூக்கச் செய்யலாமா? சூடு வைக்கலாமா? இல்லை மின் அதிர்ச்சி தந்து பூக்கச் செய்யலாமா என்று விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாகப் பூக்க வேண்டிய மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றன. பூக்காமலே கருகி மடிகின்றன….
இவையெல்லாம் இன்றைய கல்விச் சூழல் பற்றிய எனது குமுறல்களே! பூக்கள் மலர்வதும், பொழுது விடிவதும், அறியாமை இருள் மடிந்து அறிவொளி பிறப்பதும் இயற்கையின் அற்புதங்கள். இவற்றையெல்லாம் விழிகளைத் திறந்து காணவும், உணரவும், உணர்ந்து மகிழவும் இன்று எத்தனை பேருக்கு இயல்கிறது என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி!

கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் புதினம் சிறுகதை போன்ற எந்த நுாலினைப் படிக்கும் போதும் அவற்றில் உள்ள வார்த்தைகள் அல்ல – வாக்கியங்கள் அல்ல – அவற்றுள் பொதிந்து கிடக்கும் பொருளை – உட்கருத்தை உணர்தல், அவற்றை உணர்ந்து உள்வாங்கி நுாலாசிரியனின் மன ஓட்டத்துடன் ஒத்துப் போதல் அல்லது மாறுபட்டு நிற்றல் என்பதுதான் கற்றலின் நோக்கம். ஆனால் இன்றைய கல்வியில் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாகவே நிற்கின்றன. பொருளாகப் புரிந்து கொள்ளப்படவே இல்லை என்பதுதான் இன்றைய கல்வியின் கொடுமை. பொருளை உள்வாங்கும் தன்மையையே இன்றைய மாணவன் இழந்து தவிக்கிறான். இன்று கற்றலே வீணாகிப் போனது!
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?