<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.12.18

எங்கள் குலதெய்வம் காளையார் மங்களம் சந்தனக்கருப்பரைப் போற்றி நான் எழுதிய கவிதை

குலதெய்வ வாழ்த்து

மங்கலமாம் நல்லூரில் 
தங்கி அருள் புரிந்து வரும் 
எங்கள் குல தெய்வமே 
எம் இறைவா போற்றுகிறோம் 

சங்கடங்கள் தீர்த்து வைக்கும் 
சந்தனக் கருப்பா போற்றி 
எங்களை வழிநடத்தி 
என்றும் முன் நிற்பாய் போற்றி

பரியேறும் பெருமாளே
பகை நடுங்கும் அதிதீரா 
அரிவாளே ஆயுதமாய் 
அன்பர்களைக் காப்பவனே 

உன் நாமம் போற்றுகிறேன் 
உனைத் தொழவே வாழுகிறேன் 
என்குலம் தழைத்திடவே 
என்றென்றும் துணை இருப்பாய்
               

பொன்நாடாள் பூஆண்டாள்
புகழ்மிகவே வாழவைப்பாள்
சோனமுத்து காளியம்மாள்
நல்வழியே காட்டிடுவார்

எண்ணறிய தெய்வங்கள்
எங்கணுமே சூழ்ந்திருக்க
உன்னத இமயம்போல்
உயர்ந்திருப்பார் நம்கருப்பர்.

தேடிவரும் அடியவர்க்குத்
தினம்அருளும் வள்ளலவர்
நாடிவந்த நன்மையெலாம்
நமக்கருளும் தெய்வமவர்

கருணைமிகு குலதெய்வம்
காலமெல்லாம் வாழவைக்கும்
கருப்பரையே தொழுதிடுவோம்
கவலையெலாம் தொலைத்திடுவோம்
                                                       --ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?