<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

20.6.22

மாணவிக்கு வந்த பிரச்சினை  

 நான் கணினி பயன்பாட்டியல் துறையில் துறைத் தலைவராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. 


ஒரு நாள் நான் வகுப்பு முடித்து வெளியே வந்தபோது அந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண் வேகமாக வெளியே ஓடிவந்தாள். சார் உங்களிடம் சில விஷயங்களைப் பேச வேண்டும் அனுமதிப்பீர்களா என்று கேட்டாள்.


என்னமா என்ன பிரச்சினை என்று கேட்டேன். தன்னை ஒரு முதுநிலை வரலாற்று மாணவன் (அவனும் முஸ்லிம்) தினமும் கல்லூரிக்கு வரும் போதும் போகும் போதும் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் இது தாங்கமுடியாத  மனத்துயரை அளிப்பதாகவும் சொன்னாள்.


காலையில் வீட்டிலிருந்து  கல்லூரி வரைக்கும் மாலையில் கல்லூரியிலிருந்து வீடு வரைக்கும் தினமும் அவன் என்னைப் பின் தொடர்கிறான் என்று சொன்னாள்.


உங்க அப்பாவிடம் இதுபற்றி பேசினாயா என்று கேட்டேன்.


இல்ல சார் அப்பா கிட்ட பேச முடியாது இந்தப் பிரச்சனை பற்றித் தெரிந்தால் உடனே அவர் என் படிப்பை நிறுத்தி விடுவார். கல்லூரிக்கு போக வேண்டாம் என்று சொல்லி விடுவார் என்று கண் கலங்கினாள்.


எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சரிம்மா என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் என்று அவளை அனுப்பிவிட்டு நேராக வரலாற்றுத் துறைக்கு சென்றேன். துறைத் தலைவரான எனது நண்பர் பாட்ஷா அப்போது நீண்ட விடுமுறையில் இருந்தார்.


எனவே பிற ஆசிரியர்களிடம் பேசினேன். 


அந்தப் பெண்ணின் பிரச்சினையை சொன்னேன். உங்கள் மாணவரை நல்வழிப்படுத்தி இவளது வழியில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டேன். அந்த ஆசிரியர்கள் மிகவும் ஆறுதலாகப் பேசினார்கள். அந்த மாணவன் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தார்கள்.


அதன்பிறகு நான் கல்லூரி முதல்வரையும் சந்தித்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.


அந்த மாணவன் அதன்பிறகு ஒடுங்கி விட்டான். சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தேன். இப்போது அவன் பின்தொடரவில்லை என்று சொன்னாள்.


சில மாதங்கள் கழித்துத் துறைத் தலைவர்கள் கூட்டம் நடந்த போது கல்லூரி முதல்வர் இது பற்றிக் குறிப்பிட்டார்.


எல்லாப் பிரசினைகளையும் முதல்வர்தான் தீர்க்க வேண்டும் என்று நினைக்காமல் தானே நடவடிக்கை எடுத்து பிரசினையைத் தீர்த்து விட்டு எனக்குத் தகவல் தெரிவித்தார் என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?