<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

15.7.20

நல்லவர்களும் கெட்டிக்காரரும் 

Smart versus good

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
 ஆகுல நீர பிற

உண்மையானவர்கள், நல்லவர்கள் பிறரையும் நல்லவர்களாக ஆக்குகிறார்கள். நல்லவர்களிடம் பழக நாம் ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் நமக்கு எதிரி லோ நமது முதுகுக்குப் பின்போ ஒரு போதும் நமக்குக் குழி தோண்டுவதில்லை. எனவே நல்லவர்கள்தான் நமது இதயத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். அவர்களால்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உண்டால் அம்ம இவ்வுலகம் என்று புறநானூற்றுக் கவிஞன் கூறியதெல்லாம் இவர்களைப் பற்றித்தான்.

ஆனால் கெட்டிக்காரர்கள் பிறரை முட்டாள்களாகவும் ஏமாளிகளாகவும் நினைத்துதான் செயல்பட்டுக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இவர்களது கெட்டிகாரத் தனத்திற்கு எவரையும் பலிகடா ஆக்கி விடுவார்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் ஒதுங்கியே இருப்பதும் நெருங்காமல் இருப்பதும் நமக்கு நல்லது.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?