சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
25.11.04
தேநீரில் பலவகைகள்
சுவையான தேநீர் குறித்த சந்திரவதனாவின் பதிவைப் படித்ததும் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.
பாலும் சர்க்கரையும் தேயிலையும் சேர்ந்த வழக்கமான தேநீருக்குப் பதிலாக வேறு சில சுவையான தேநீர் தயாரிப்பு முறைகள் இதோ:
1. பொதினா தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து ஐந்து அல்லது ஆறு இலைகள் பொதினாவும் அரை தேக்கரண்டி தேயிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். (நிறைய பொதினாவோ தேயிலையோ சேர்த்தால் கசப்பாக இருக்கும்). பால் தேவையில்லை.
2. எலுமிச்சை தேநீர்
மேலே குறித்தபடி தயாரித்த தேநீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பொதினா இல்லாமல் வெறும் தேயிலையைக் கொதிக்க வைத்தும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். பால் சேர்த்தால் திரிந்து போய்விடும்.
3. இஞ்சி தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து தேவையான அளவு தேயிலையும் அத்துடன் சிறிது இஞ்சியை அம்மியில் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பால் தேவையில்லை. வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
4. ஏலக்காய் தேநீர்
இஞ்சி தேநீர் போலவே ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்தும் தேநீர் தயாரிக்கலாம்.
வழக்கமாகப் பாலுடன் தயாரிக்கும் தேநீரில் ஏலக்காய் இஞ்சி இரண்டுமோ அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றோ சேர்த்துக் கொள்ளலாம்.
|
பாலும் சர்க்கரையும் தேயிலையும் சேர்ந்த வழக்கமான தேநீருக்குப் பதிலாக வேறு சில சுவையான தேநீர் தயாரிப்பு முறைகள் இதோ:
1. பொதினா தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து ஐந்து அல்லது ஆறு இலைகள் பொதினாவும் அரை தேக்கரண்டி தேயிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். (நிறைய பொதினாவோ தேயிலையோ சேர்த்தால் கசப்பாக இருக்கும்). பால் தேவையில்லை.
2. எலுமிச்சை தேநீர்
மேலே குறித்தபடி தயாரித்த தேநீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பொதினா இல்லாமல் வெறும் தேயிலையைக் கொதிக்க வைத்தும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். பால் சேர்த்தால் திரிந்து போய்விடும்.
3. இஞ்சி தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து தேவையான அளவு தேயிலையும் அத்துடன் சிறிது இஞ்சியை அம்மியில் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பால் தேவையில்லை. வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
4. ஏலக்காய் தேநீர்
இஞ்சி தேநீர் போலவே ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்தும் தேநீர் தயாரிக்கலாம்.
வழக்கமாகப் பாலுடன் தயாரிக்கும் தேநீரில் ஏலக்காய் இஞ்சி இரண்டுமோ அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றோ சேர்த்துக் கொள்ளலாம்.
Comments:
நண்பரே,
அது தே நீர். தே (tea; தே என்ற சீனச்சொல்லின் எழுத்துப் பெயர்ப்பு) யின் நீர். தேனீர் என்று எழுதினால் அது தேன் நீர் என்ற பொருள் தரும்.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment
அது தே நீர். தே (tea; தே என்ற சீனச்சொல்லின் எழுத்துப் பெயர்ப்பு) யின் நீர். தேனீர் என்று எழுதினால் அது தேன் நீர் என்ற பொருள் தரும்.
அன்புடன்,
இராம.கி.
