<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

15.11.04

அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். 

ஒருவர் நமக்கு மணிக்கணக்காக ஆலோசனை சொல்கிறார். நம் காதுகளில் விழுந்தாலும் அவை எதுவும் நம் கவனத்தில் வருவதில்லை. ஆழமாகப் பதிவதில்லை. எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தி விடுவதில்லை.

வேறு ஒரு சமயத்தில் யாரோ போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகும் (அதே கருத்திலான) சொற்கள் நமக்குள் அழுந்துகின்றன. ஆழச் சென்று தைக்கின்றன.

ஏன் இப்படி என்று கேட்டால் வழக்கமாக இப்படித்தான் பதில் சொல்கிறார்கள்:

"அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்."

அல்லது

"அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்"

ஒரு பிரபலமான சாமியார் ஒருவரிடம் எனது உறவினர் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடு. அவரது பேச்சுக்களை கேட்பது - அவரது குழுவோடு பக்திப் பாடல்கள் பாடுவது இப்படி. இதைப் பற்றி எனக்குத் தெரிய வந்ததும் நான் அவரைப் பலவிதமாக எச்சரித்தேன். அந்த சாமியார் பற்றி வெளியான பல செய்திகளைத் தொகுத்து அனுப்பினேன். ஆபிரகாம் கோவூர் இவர்களது உண்மையான முகத்தை எப்படி வெளிப்படுத்தினார் என்று இணையத்தில் கிடைத்த தகவல்களை எல்லாம் அனுப்பினேன்.

ஆனால் அவரிடம் இவையெல்லாம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவே இல்லை. அவர் இதற்கெல்லாம் ஒரே பதில் தான் வைத்திருக்கிறார். "நான் மிகுந்த மனத்துயரில் இருந்த போது இந்த குருதான் எனக்கு அமைதியை வழங்கினார். இவரைப் பற்றி அறிந்து இவரது வழிக்கு வந்த பிறகு தான் நான் நிம்மதியாக எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்கிறேன். மற்றவர்களது விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இவரைப் பற்றித் தெரிய வந்த பிறகும் நீ இவரைப் பின்பற்றவில்லையானால்,

உனக்குக் கொடுப்பினை இல்லை".

இது எப்படி இருக்கிறது?
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?