சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
10.11.04
தீபாவளிப் பலகாரம்
தீபாவளிக்கு மட்டுமல்ல எங்கள் வீடுகளில் நடைபெறும் எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் பலகாரம் "வெள்ளைப் பணியாரம்". இதன் செய்முறையை இன்று என் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.
200 மி.லி. அளவு பச்சரிசி 25 மி.லி. அளவு உளுத்தம் பருப்பு இரண்டையும் சுமார் 1 மணி நேரம் நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். (Mixie, Grinder எதுவானாலும் பரவாயில்லை) மாவில் நிறைய நீர் ஊற்றித் தோசைக்குக் கரைப்பது போல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. அரைத்த உடனேயே வெள்ளைப் பணியாரம் சுடலாம்.
வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தட்டையான (குழிவற்ற) கரண்டி ஒன்றில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். மாவை மெதுவாக. சீராக ஊற்ற வேண்டும். ஊற்றும் போதே அழகிய விளிம்புடன் கூடிய பணியாரம் உருவாகிவிடும்.. ஒருமுறை திருப்பி விட்டு, வெந்ததும் எடுத்து மிளகாய்த் துவையலுடன் சூடாகச் சாப்பிடலாம்.
ஒவ்வொன்றாகத் தான் இதனைச் செய்ய முடியும். அடுப்பும் மிதமாகத்தான் எரிய வேண்டும். ஒவ்வொரு பணியாரத்துக்கும் மாவை நன்கு கலக்கிய பிறகு தான் கரண்டியில் எடுக்க வேண்டும். மிகவும் வெந்து முறுக்குப் போல ஆகி விடக் கூடாது. தண்ணீர் கூடிப் போனால் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிது பாலும் மிகச்சிறிதளவு சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.
அழகிய விளிம்புடன் வெள்ளைப் பணியாரம் செய்வதுதான் இதிலுள்ள சிறப்பு. இதைக் “கரை கூடி வருதல்” என்பார்கள். இதற்காக வேண்டுதல்கள் பல செய்வதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்வதும் உண்டு.
ஒரு பணியாரத்துக்கு என்ன இவ்வளவு சிறப்பு என்கிறீர்களா. ஒரு முறை அதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு இந்தக் கேள்வியே எழாது.
|
200 மி.லி. அளவு பச்சரிசி 25 மி.லி. அளவு உளுத்தம் பருப்பு இரண்டையும் சுமார் 1 மணி நேரம் நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். (Mixie, Grinder எதுவானாலும் பரவாயில்லை) மாவில் நிறைய நீர் ஊற்றித் தோசைக்குக் கரைப்பது போல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. அரைத்த உடனேயே வெள்ளைப் பணியாரம் சுடலாம்.
வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தட்டையான (குழிவற்ற) கரண்டி ஒன்றில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். மாவை மெதுவாக. சீராக ஊற்ற வேண்டும். ஊற்றும் போதே அழகிய விளிம்புடன் கூடிய பணியாரம் உருவாகிவிடும்.. ஒருமுறை திருப்பி விட்டு, வெந்ததும் எடுத்து மிளகாய்த் துவையலுடன் சூடாகச் சாப்பிடலாம்.
ஒவ்வொன்றாகத் தான் இதனைச் செய்ய முடியும். அடுப்பும் மிதமாகத்தான் எரிய வேண்டும். ஒவ்வொரு பணியாரத்துக்கும் மாவை நன்கு கலக்கிய பிறகு தான் கரண்டியில் எடுக்க வேண்டும். மிகவும் வெந்து முறுக்குப் போல ஆகி விடக் கூடாது. தண்ணீர் கூடிப் போனால் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிது பாலும் மிகச்சிறிதளவு சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.
அழகிய விளிம்புடன் வெள்ளைப் பணியாரம் செய்வதுதான் இதிலுள்ள சிறப்பு. இதைக் “கரை கூடி வருதல்” என்பார்கள். இதற்காக வேண்டுதல்கள் பல செய்வதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்வதும் உண்டு.
ஒரு பணியாரத்துக்கு என்ன இவ்வளவு சிறப்பு என்கிறீர்களா. ஒரு முறை அதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு இந்தக் கேள்வியே எழாது.
Comments:
Post a Comment
