<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.11.04

எங்களுக்கும் சிரிப்பு வரும் 

ஒளியியல் ஆய்வுக் கூட நுழைவாயிலில் இப்படி எழுதப்பட்டிருந்ததாம்:
"உங்களிடம் எஞ்சியுள்ள நல்ல கண்ணால் லேசர் ஒளிக்கற்றையை நேரடியாகப் பார்த்துவிடாதீர்கள்".

*****************************************************************

நத்தை ஒன்று தெருவைக் கடக்கும் போது ஆமை ஒன்று அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு மருத்துவ மனையில் நினைவு திரும்பிய போது "என்ன நடந்தது" என்று நத்தையைக் கேட்டதற்கு "என்னால் எதையுமே நினைவு படுத்திச் சொல்ல முடியவில்லை.. மிக மிக வேகமாக நடந்த விபத்து அது" என்றதாம்..

*****************************************************************

இவான் இவானோவிச் என்ற ருசிய அறிவியலறிஞர், "வெப்பமானி எவ்வளவு விரைவாகக் கீழே விழுகிறது" என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். வெப்பமானி ஒன்றையும் மெழுகுவர்த்தி ஒன்றையும் எடுத்துக் கொண்டு தமது ஆய்வுக்கூடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றார். மெழுகுவர்த்தியை ஒளியேற்றி, அதையும் வெப்பமானியையும் ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடைவதை உறுதி செய்து கொண்டார். "வெப்பமானி ஒளியின் வேகத்தில் கீழே விழுகிறது" என்று தமது அறிவியல் நுாலில் எழுதினார்.

*****************************************************************

மூலக்கூறுகளைப் பிளந்தால் அணுக்கள் கிடைக்கின்றன. அணுக்களைப் பிளந்தால்.. நேர் எதிர் மின்னுாட்டமுள்ள பகுதிப் பொருட்கள் மட்டும் தானே கிடைக்க வேண்டும். ஆனால் பயங்கரமான ஆற்றல் வெளியாகிறது. என்ன கோமாளித் தனமான அறிவியல்?

*****************************************************************

சி.வி.ராமன் தனது வாழ்வின் பிற்பகுதியில் வைரங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பற்றிப் பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு கல்லுாரியில் அவரை வைரங்கள் தொடர்பாகப் பேச அழைத்திருக்கிறார்கள். அவர் பேசி முடித்ததும் ஒரு மாணவர் எழுந்து "இத்தகைய அற்புதமான வைரங்களை நம்மால் உருவாக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராமன், "வைரங்களை உருவாக்குவது மிக மிக சுலபம். கொஞ்சம் நிலக்கரியை எடுத்துக் கொள்ளுங்கள் சற்று கனமான பாறைகள் உள்ள இடமாகப் பார்த்துத் தரையை ஆயிரம் அடி தோண்டுங்கள். நிலக்கரியைப் பத்திரமாக அங்கே வைத்துவிட்டு மண்ணை மூடி ஒரு ஆயிரம் ஆண்டுகள் காத்திருங்கள்.. வைரம் தயார்" என்றாராம்.

*****************************************************************

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?