சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
25.10.04
நூகலை அடுப்பு.. மேலும் சில தகவல்கள்
நூகலை அடுப்பு குறித்தான எனது
முந்தைய பதிவுக்குப் பிறகு இந்த
இந்திய வலைத்தளத்தில் மேலும் பல தகவல்கள் காணக் கிடைத்தன. நூகலையின் கண்டுபிடிப்பு முதல் அதன் நன்மை தீமை வரை பல கருத்துக்களையும் ஆராய்ந்து எளிமையாக எழுதியுள்ளார்கள்.
நூகலை அடுப்புக்களில் உணவைச் சமைப்பதால் பல உயிர்ச்சத்துக்கள் அழியாமல் இருப்பதாகவும் உணவு கருகுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் நன்மையை விடத் தீமையே அதிகம் என்ற கருத்தையும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். உயரழுத்த மாறுதிசை மின்னோட்டம் பயன்படுத்தப் படுவதால் மூலக்கூறு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இத்தகைய உணவை உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகுதி என்றும் எழுதியுள்ளார்கள்.
எட்டுத் தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் நூகலை காரணமாக இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதாகவும் நஞ்சை உண்டது போன்ற தன்மைகள் காணப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய உணவால் உளவியல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் நினைவாற்றல் குறையும் என்றும் பயமுறுத்துகிறார்கள்.
அது ஒரு நல்ல விரிவான கட்டுரை.
|
முந்தைய பதிவுக்குப் பிறகு இந்த
இந்திய வலைத்தளத்தில் மேலும் பல தகவல்கள் காணக் கிடைத்தன. நூகலையின் கண்டுபிடிப்பு முதல் அதன் நன்மை தீமை வரை பல கருத்துக்களையும் ஆராய்ந்து எளிமையாக எழுதியுள்ளார்கள்.
நூகலை அடுப்புக்களில் உணவைச் சமைப்பதால் பல உயிர்ச்சத்துக்கள் அழியாமல் இருப்பதாகவும் உணவு கருகுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் நன்மையை விடத் தீமையே அதிகம் என்ற கருத்தையும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். உயரழுத்த மாறுதிசை மின்னோட்டம் பயன்படுத்தப் படுவதால் மூலக்கூறு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இத்தகைய உணவை உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகுதி என்றும் எழுதியுள்ளார்கள்.
எட்டுத் தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் நூகலை காரணமாக இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதாகவும் நஞ்சை உண்டது போன்ற தன்மைகள் காணப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய உணவால் உளவியல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் நினைவாற்றல் குறையும் என்றும் பயமுறுத்துகிறார்கள்.
அது ஒரு நல்ல விரிவான கட்டுரை.
Comments:
ஏன் நுண்ணலை-யை நூகலை என்று மாற்றிவிட்டீர்கள் என்று எண்ணினேன். பிறகு இராம.கியின் குறிப்பைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
பயனுள்ள கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள். நூகலை அடுப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் தேநீரைக் கூட நூகலையில் தான் வைத்துக் கொண்டிருக்கிறோம்!
சமைக்கத் தானே வேண்டாம், ஏற்கனவே சமைத்ததைச் சூடாக்க வைத்துக் கொள்ளலாம் தானே. காசி சொன்னது போல், அது இல்லாவிட்டால் சூடான சாப்பாட்டுக்கு இங்கு வழியில்லாமல் போய்விடும்.
பயனுள்ள கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள். நூகலை அடுப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் தேநீரைக் கூட நூகலையில் தான் வைத்துக் கொண்டிருக்கிறோம்!
சமைக்கத் தானே வேண்டாம், ஏற்கனவே சமைத்ததைச் சூடாக்க வைத்துக் கொள்ளலாம் தானே. காசி சொன்னது போல், அது இல்லாவிட்டால் சூடான சாப்பாட்டுக்கு இங்கு வழியில்லாமல் போய்விடும்.
தங்கள் வருகைக்கு நன்றி செல்வராஜ்.
நூகலை அடுப்புக்குப் பதிலாக சாதாரண மின்னடுப்புக்கள் - சுடும் தட்டுக்கள் - HOT PLATES - போன்றவற்றைப் பயன்படுத்தலாம் தானே?.
Post a Comment
நூகலை அடுப்புக்குப் பதிலாக சாதாரண மின்னடுப்புக்கள் - சுடும் தட்டுக்கள் - HOT PLATES - போன்றவற்றைப் பயன்படுத்தலாம் தானே?.
