<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.8.04

திருமணத்தின் நோக்கம் 

இது ஆடி மாதம். மிக அரிதாக சில முகமதிய நண்பர்களின் திருமணங்கள் தவிரப் பிறர் யாரும் இந்த மாதம் திருமணம் செய்வதில்லை. ஆடி மாதம் விதைப்புக் காலம் என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள் போலும்.

சில மாதங்கள் முன்பு ஒரு திருமண வீட்டில் பேச்சு வாக்கில் "திருமணம் எதற்காக" என்று கேட்டு விட்டேன். அப்போது தான் பெரும்பாலும் மனிதர்கள் எவ்வளவு பாமரர்களாக இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஏனென்றால் என் கேள்வியையே அருவருப்பாக நோக்கிய சிலர்.. பொது இடத்தில் இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்ற சிலர்..

பிறகு அதற்கான பதிலை நான் சொன்னேன். திருமணம் பெண்ணுக்குப் பாதுகாப்பையும் (security) ஆணுக்கு அடையாளத்தையும் (identity) தருகிறது. திருமணத்தின் நோக்கம் அதுதான்.பெண்ணுக்கு சமுதாய பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற பலவும் திருமண உறவால் உறுதி செய்யப் படுகின்றன.

ஆணோ திருமண நாளில் தான் ஒரு மனிதனாக அடையாளம் காணப்படுகிறான். அதுவரை அவன் சிறுவன் தான். இங்கெல்லாம் அவனைத் திருமணத்திற்குப் பிறகு ஒரு புள்ளி என்று குறிப்பிடுகிறோம். அதுவரை அவன் சுழி தான்.

திருமணங்கள், பொருளாதாரச் சமனிலை உடைய இரு குடும்பங்கள் தமது சொத்தைப் பங்கீடு செய்து கொள்வதற்கான ஒப்பந்தமாகக் குறுக்கிய போதிலும், அன்பு பாசம் காதல் எல்லாம் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப் படும் நிலையிலும், தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் சமுதாய உறவுகளில் குறிப்பிடத் தக்க திருப்பு முனையாகத் திருமணம் அமைந்துவிடுகிறது.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?