<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

3.8.04

அடிப்படை அறிவியல்.. 

பார்டீன், பிரெட்டெயின் என்ற இரண்டு இயற்பியலாளர்கள் 1947ல் கண்டுபிடித்த குறைக்கடத்தித் தத்துவம் தான் கணினித் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கெல்லாம் ஆதாரம் எனலாம்.

வெற்றிடக்குழாய்களைக் கொண்டு கணினி வடிவமைக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் அது மிகப் பெரும் வடிவிலானதாகவும் அதிக மனித சக்தியையும் மின்னாற்றலையும் கொண்டு நிர்வகிக்க வேண்டியதாகவும் இருந்தது.

பார்டீன், பிரெட்டெயின் போன்றோரின் கண்டுபிடிப்பால் சிறுமமாக்கல் எளிதாயிற்று. தொடக்க நிலையில் இருந்த தனித்த மின்னணுச் சுற்றுக்கள் உருவாக்கக் கடினமானதாகவும் விரைவில் பழுதடையும் தன்மையதாயும் இருந்தன. பழுதைக் கண்டறியவும், பழுதை அகற்றவுமே பெருமளவு மனித முயற்சி தேவைப்பட்டது.

தொகுப்பு மின்னணுச் சுற்றுக்கள் (IC) உருவாக்கப்பட்டதும் மின்னணுத்துறையிலும் அதன் தொடர்ச்சியாகக் கணினி வன்பொருள் துறையிலும் வியக்கத் தக்க மாற்றங்கள் மிகக் குறைந்த கால அளவில் ஏற்பட்டன.

ஆக இவற்றுக்கெல்லாம் ஆதாரம் அடிப்படை அறிவியலில், இயற்பியலில் தோற்றுவிக்கப்பட்ட குறைக்கடத்தித் தத்துவம் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

எளிய மொழியில் சொல்வதானால் பார்டீன், பிரெட்டெயின் இருவரும் டிரான்சிஸ்டரைக் கண்டறிந்த பிறகு தான் மின்னணு இயலும் கணினி இயலும் வளர்ச்சி கண்டன.

இருநுாறு ஆண்டுகளுக்கு முன் மைக்கேல் பாரடே தன்னுடைய மகத்தான கண்டுபிடிப்பான மின்துாண்டல் விதிகளை அறிவியல் மாநாடு ஒன்றில் விளக்கிக் கூறிய போது அங்கே பார்வையாளர் ஒருவர், “உங்கள் கண்டுபிடிப்பால் என்ன பயன்?” என்று கேட்டாராம். அதற்கு பாரடே, “புதிதாகப் பிறந்த குழந்தையால் என்ன பயன் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

அவரது மின்துாண்டல் தத்துவத்தால்தான் இன்று உலகில் உருவாக்கப்படும் மின்சாரத்தில் 90 விழுக்காட்டுக்கும் மேல் உருவாக்கப்படுகிறது. மின்விசிறியில் தொடங்கி அனைத்து சுழலும், ஓடும் மின்சாதனங்களுக்கும் அவரது மின்துாண்டல் தத்துவமே காரணம்.

ஓப்பன்கைமர் என்ற அணுக்கருவியலாளர் முதலாவது அணுகுண்டைச் சோதித்து வெற்றி கண்டார். இருபதாம் நுாற்றாண்டில் இயற்பியலின் தந்தையாகக் கருதப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அணுவெடிப்பில் வெளியாகும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதைத் தனது புகழ்வாய்ந்த நிறை-ஆற்றல் சமன்பாடு வழியாகத் தெளிவுபடுத்தினார்.

பார்டீன், பிரெட்டெயின், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மைக்கேல் பாரடே போன்ற எண்ணற்ற இயற்பியலாளர்கள் உருவாக்கிய அடிப்படை அறிவியல் கருத்துக்கள் இன்றளவும் மனித இன மேன்மைக்கு வழிவகுத்தே வந்துள்ளன.

ஆனால் நம் நாட்டில் பயன்பாட்டு அறிவியலின் மீதான மக்களின் மோகம் சிந்திக்க வேண்டியதாயுள்ளது.

கருத்துக்களை உருவாக்குதலா.. பொருட்களை வடிவமைத்தலா.. எது முதன்மையானது.

கவிஞனை விடத் தச்சனும் கொத்தனும் காசு ஈட்டுதல் எளிது என்பதால் கவித்துவ உணர்வுகளைச் சுட்டெரித்துக், காசு தேடும் வாழ்வே மேலானது என்று பேசித் திரிவோமா?

வாழ்வின் உன்னதங்கள் எல்லாம் நம் அளவீடுகளில் அடங்காதவை.

ஆதார உண்மைகளைத் தேடுதல் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கக் கூடும்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?