சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
7.7.04
கொஞ்சம் அறிவியல்
அறிவியலின் அடிப்படைகளை எளிய தமிழில் எழுதும் ஆர்வம் வலைப்பதிவைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தது. பிறகு நோக்கம் மாறிப் போய் கவிதை விமரிசனம், மருத்துவம் அது இது என்று சுற்றி அலைந்து.. இன்று எதேச்சையாக http://www.kuro5hin.org என்ற தளத்தில் அற்புதமாக எழுதப்பட்ட பல அறிவியல் கருத்துக்களைப் பார்த்ததும் மீண்டும் இங்கே தொடர்கிறேன்.
கேள்வி 1: தண்ணீர் ஏன் பள்ளத்தை நோக்கி ஓடுகிறது?
“இது என்ன மடத்தனமான கேள்வி? அது எப்போதும் அப்படித்தான் ஓடுகிறது” என்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்: ஏதாவது அறிவியல் காரணம் உண்டா இல்லையா?
உடனே பலருக்கும் ஒரு பதில் தோன்றிவிடும்: புவி ஈர்ப்பு விசையின் காரணமாக என்று சொல்லி விடுவார்கள். மேட்டிலும் பள்ளத்திலும் ஒரே போன்ற புவி ஈர்ப்பு விசை (அல்லது புவி ஈர்ப்பு முடுக்கம்) தானே உள்ளது? அது எப்படி காரணமாகும்?
உங்கள் பதில் என்ன?
கேள்வி 2: ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல் நாள் முழுதும் பண்பலை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்க வேண்டும். முடியுமா? என்ன வழி? (அடுத்த வீட்டில் ஒட்டுக் கேட்கலாம் என்று சொல்லாதீர்கள்..) அறிவியல் தீர்வு என்ன?
கேள்வி 3: இரும்பு ஒன்று காந்தமாகும் போது என்ன நடக்கிறது? இரும்புக்குள் நடக்கும் எந்த மாற்றத்தால் அது காந்தமாகிறது? இரும்பு ஒன்று ஏன் மற்றொரு இரும்பை ஈர்ப்பதில்லை? காந்தமாக்கப் பட்டதும் மற்றொரு இரும்பை ஈர்க்கும் ஆற்றல் எப்படி வருகிறது?
கேள்வி 4: ஒரு செப்பு குடத்தில் நீர் நிரப்பி அதனை அடுப்பில் ஏற்றிச் சுட வைக்கிறோம். திடீரென தொலைபேசியில் அவசர அழைப்பு.. போட்டது போட்ட படி வீட்டைப் âட்டிக் கொண்டு வெளிäருக்குச் சென்று விடுகிறோம். இரண்டு தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால்.. என்ன நடந்திருக்கும்?
நீர் முழுவதும் ஆவியாகி, செம்புப் பாத்திரம் உருகி, அடுப்பு முழுவதும் மெழுகு போல ஒழுகி, அதனால் அடுப்பு அணைந்து, வீடு முழுதும் எரிவாயுவால் நிரம்பி...
இப்படி நடந்திருக்குமா இல்லை வேறு என்ன ஆகியிருக்கும்?
எனது பதில்கள் அடுத்த பதிவில்..
உங்கள் பதில்களைக் கூறுங்கள்...
|
கேள்வி 1: தண்ணீர் ஏன் பள்ளத்தை நோக்கி ஓடுகிறது?
“இது என்ன மடத்தனமான கேள்வி? அது எப்போதும் அப்படித்தான் ஓடுகிறது” என்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்: ஏதாவது அறிவியல் காரணம் உண்டா இல்லையா?
உடனே பலருக்கும் ஒரு பதில் தோன்றிவிடும்: புவி ஈர்ப்பு விசையின் காரணமாக என்று சொல்லி விடுவார்கள். மேட்டிலும் பள்ளத்திலும் ஒரே போன்ற புவி ஈர்ப்பு விசை (அல்லது புவி ஈர்ப்பு முடுக்கம்) தானே உள்ளது? அது எப்படி காரணமாகும்?
உங்கள் பதில் என்ன?
கேள்வி 2: ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல் நாள் முழுதும் பண்பலை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்க வேண்டும். முடியுமா? என்ன வழி? (அடுத்த வீட்டில் ஒட்டுக் கேட்கலாம் என்று சொல்லாதீர்கள்..) அறிவியல் தீர்வு என்ன?
கேள்வி 3: இரும்பு ஒன்று காந்தமாகும் போது என்ன நடக்கிறது? இரும்புக்குள் நடக்கும் எந்த மாற்றத்தால் அது காந்தமாகிறது? இரும்பு ஒன்று ஏன் மற்றொரு இரும்பை ஈர்ப்பதில்லை? காந்தமாக்கப் பட்டதும் மற்றொரு இரும்பை ஈர்க்கும் ஆற்றல் எப்படி வருகிறது?
கேள்வி 4: ஒரு செப்பு குடத்தில் நீர் நிரப்பி அதனை அடுப்பில் ஏற்றிச் சுட வைக்கிறோம். திடீரென தொலைபேசியில் அவசர அழைப்பு.. போட்டது போட்ட படி வீட்டைப் âட்டிக் கொண்டு வெளிäருக்குச் சென்று விடுகிறோம். இரண்டு தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால்.. என்ன நடந்திருக்கும்?
நீர் முழுவதும் ஆவியாகி, செம்புப் பாத்திரம் உருகி, அடுப்பு முழுவதும் மெழுகு போல ஒழுகி, அதனால் அடுப்பு அணைந்து, வீடு முழுதும் எரிவாயுவால் நிரம்பி...
இப்படி நடந்திருக்குமா இல்லை வேறு என்ன ஆகியிருக்கும்?
எனது பதில்கள் அடுத்த பதிவில்..
உங்கள் பதில்களைக் கூறுங்கள்...
Comments:
Post a Comment
