<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

12.7.04

கொஞ்சம் அறிவியல் 2 

விடை:

1. அழுத்தம் குறைந்த இடத்தில் நிலைத்தன்மை உண்டு. உயரம் குறையக் குறைய அழுத்தம் குறையும்.. நிலைத்தன்மை கூடும். எனவே நீர் தாழ்வான இடத்தை நோக்கியே எப்போதும் ஓடுகிறது. ஒவ்வொரு பொருளும் தனது அழுத்தத்தை மிகக் குறைவாகவே வைத்துக் கொள்ள முயலும் என்பது இயற்பியலின் ஆதார விதிகளில் ஒன்று. (மனிதர் கூட உயர் அழுத்த நிலையில் கொதித்துக் கொண்டிருக்கவா விரும்புகிறோம்.. அக்கடா என்று கவலைகளற்று வாழ்வதல்லவா இனிய வாழ்வு).. தண்ணீரும் அப்படித்தான். உயர் மட்டங்களில் அதிக அழுத்ததில் நிலைத்து இருப்பதில்லை. (Every body tends to have minimum potential energy. potential energy = mgh. Lower the height, lower the potential.)

2.மின் கலங்களின் விலை மிக அதிகம். மின்கலத்தவிர்ப்பான் (battery eliminator) ஒன்றை வாங்கி வீட்டு மின்சாரத்தில் பயன்படுத்தினால் பயன்பாட்டுச் செலவு கிடையாது. வீட்டு மின்னளவி சுழல வேண்டுமானால் குறைந்தது 30 அல்லது 40 வாட் மின்சாரம் பயன்படுத்த வேண்டும். வானொலிப் பெட்டிகள் 2 அல்லது 3 வாட் மின்சாரத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன. எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு மின்கலத்தவிர்ப்பான் ஒன்றால் இயங்கும் வானொலியைப் பாட விட்டுப் பாருங்கள். மின்னளவி சுழலாது. செலவில்லாமல் தான் வானொலி பாடுகிறது. மிகத் துல்லியமான மின்னணு அளவி பயன்படுத்தினால் கூட, 500 மணி நேரத்துக்கு ஒரு யூனிட் செலவாகும்..

3. இரும்புக்குள்ளே எண்ணற்ற காந்தக் களங்கள் (magnetic domains) ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கின்றன. அதனால் அதன் காந்தப் புலவலிமை வெளியே தெரிவதில்லை. அவற்றை ஒழுங்கு படுத்தி (வட துருவம் எல்லாம் ஒரு திசையிலும் தென் துருவமெல்லாம் மறுதிசையிலும் இருக்கும்படி) ஒருமுனை நோக்கும் தன்மையை (magnetic polarisation) ஏற்படுத்துதலே காந்தமாக்கலாகும் காந்தத்தை இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது மாறுபட்ட துருவத்தைத் தூண்டும். (காந்தத்தின் வட துருவத்தைத் இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது தென் துருவத்தைத் தூண்டும்.) இதைக் காந்தத் தூண்டல் என்கிறோம். (magnetic induction) அப்போது காந்தம் இரும்பை ஈர்க்கும்.

4. செம்பு உருகும் அளவு வெப்பம் ஒருபோதும் நமது அடுப்பில் வராது. அதற்கு சில ஆயிரம் பாகை வெப்பம் வேன்டும். உலைக் களத்தில் தான் செம்பை உருக்குவது சாத்தியம். நமது அடுப்பில் சில நூறு பாகைகள் வெப்பம் தான் வெளிப்படும். எனவே ஒன்று எரிவாயு தீர்ந்து போகும். இல்லையேல் அடுப்பு தொடர்ந்து எரிந்து நீர் முழுதும் ஆவியானதும், செப்புக் குடம் தொடர்ந்து சூடாகி சுற்றுப் புறத்துடன் வெப்பச் சம நிலையை எட்டும் (150 அல்லது 160 பாகைகளில் அது அடுப்பில் இருந்து பெறும் வெப்பமும் சுற்றுப் புறத்துக்கு இழக்கும் வெப்பமும் சமமாகும்) அதே நிலையில் எரிபொருள் தீரும் வரை இருக்கும்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?