<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

20.4.04

கற்றலின் இனிமை 

கற்றல் எப்போதும் இனிமையானது. அதிலும் பிறருக்குப் புரியாத அல்லது புரிந்து கொள்ளக் கடினமானவற்றை நாம் புரிந்து கொண்டு எளிமையாக எடுத்துச் சொல்லக் கூடுமானால்.. நம் வாழ்விற்கும் ஒரு பொருளிருக்கும்.

பல்வேறு கலை அறிவியல் துறைகளிலும் பொதுவாகக் கற்றலுக்குக் கால எல்லை உண்டு என்று நான் கருதுகிறேன். ஆனால் கணிணித் துறையிலோ அன்றாடம் புதுமைகள்! இப்படித்தான் மின்னஞ்சலும் வலைத்தேடலும் மட்டுமே இணையப் பயன்களாகக் கருதிக் காலம் கழித்த எனக்கு ஒரு இனிய நாளில் வலைப்பூக்கள் அறிமுகமானதும் வியந்துபோனேன்.

அதிலும் சுரதா, காசி,சங்கர், வெங்கட்,பாரி, செல்வராஜ்போன்று எத்தனை முன்னோடிகள்! இவர்களது வலைப்பூக்களையும் அவற்றில் புதியவர்களுக்கு இவர்களது வழிகாட்டல்களையும் படித்தறிந்த பிறகு நம்மாலும் வலைப்பூ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதின் விளைவுதான் இந்தப்பூ...

தொடருவேன்.

அன்புடன்
ஆச்சிமகன்
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?