<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

27.4.04

எங்கே கிடைக்கும்  

‘தாலாட்டு’, ‘மலரும் உள்ளம்’ போன்ற நுால்கள் எங்கே கிடைக்கும் என்று வலைநண்பர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இன்று நம்மிடையே இல்லை.

அவரது ‘மலரும் உள்ளம்’ முதல் தொகுதி 1954ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுத் தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது. என்னிடம் உள்ளது 1967ல் வெளியான எட்டாம் பதிப்பு.

‘மலரும் உள்ளம்’ இரண்டாம் தொகுதி 1961ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுத் தொடர்ந்துள்ளது. என்னிடம் உள்ளது 1996ல் வெளியான ஐந்தாம் பதிப்பு. இதனை நான் பழைய புத்தகங்கள் விற்கும் கடை ஒன்றில் தான் வாங்கினேன்.

இந்த இரண்டு நுால்களும் சென்னை பாரி நிலையத்தாரால் வெளியிடப் பட்டுள்ளன. நுாலில் உள்ள முகவரி 184, பிராட்வே, சென்னை-108. இந்த முகவரியில் கிடைக்கக் கூடும்.

தமிழண்ணலின் ‘தாலாட்டு’ 1963ல் காரைக்குடி செல்வி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.. ( செல்வி பதிப்பகம், செக்காலை சாலை, காரைக்குடி-630001 ) 1966ல் வெளியான நான்காம் பதிப்பு என்னிடம் உள்ளது. தற்போது பிரதிகள் ஏதும் அவர்களிடம் இல்லை. விசாரித்த போது ‘மீண்டும் பதிப்பிக்கும் எண்ணம் உள்ளது’. என்ற செய்தி கிடைத்தது. தமிழண்ணல் அவர்களையே கேட்கலாம்..

பழைய நுாலகங்களில் நிச்சயம் கிடைக்கக் கூடும். தமிழகத்தின் எந்த நகரத்திலும் உள்ள பழைய புத்தகக் கடைகளில் பொறுமையாகத் தேடிப் பாருங்கள்..

இவை தவிர நல்ல தமிழ் கற்கும் ஆர்வலர்களுக்காக கீழ்க்காணும் நுால்களைப் பரிந்துரைக்கிறேன்:

தைப்பாவை கண்ணதாசன்

ஆசிய சோதி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மலரும் மாலையும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

குடும்ப விளக்கு பாரதிதாசன்

அழகின் சிரிப்பு பாரதிதாசன்
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?