<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

22.4.04

கற்றலின் இனிமை.. 2 

அறிவியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள பல நேரங்களில் எளிய உவமைகள் துணைசெய்யக் கூடும்.

எல்லோருக்கும் தெரிந்த ஒளி விலகல் பற்றிப் பார்ப்போம்.

ஒரு கண்ணாடிக் கோப்பையில் பாதி அளவு நீர் நிரப்பி அதில் எழுதுகோல் ஒன்றை இட்டால், அது நீர்த் தளத்தைத் தொடுமிடத்தில் உடைந்தது போல் தொன்றுகிறது.

வெவ்வேறு ஊடகங்கள் சந்திக்கும் இடங்களில் ஒளியின் பாதை நேர் கோடாக அமையாமல் கோண மாறுபாட்டிற்கு உள்ளாகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையே வரையப்படும் மிகக் குறுகிய கோடு ஒரு நேர் கோடாகத்தான் இருக்க முடியும். ஆனால் வெவ்வேறு ஊடகங்களின் வழியே செல்லும் ஒளி குறுகிய பாதை வழியே செல்லாமல் நீண்ட பாதையைத் தேர்வு செய்வது எதனால்?

இந்தக் கேள்விக்கு பெயின்மேனின் விரிவுரைகளில் ஒரு விளக்கம் காணக்கிடைத்தது.

ஒரு குளக்கரையில் நீங்கள் நிற்கும் போது உங்கள் உயிர் நண்பர் நீருக்குள் ( நீச்சல் தெரியாமல் ) உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் நீச்சல் தெரிந்த நீங்கள் எந்தப் பாதை வழியே ஓடிச் சென்று அவரைக் காப்பற்றுவீர்கள்?

ஓடுவது எளிதென்றும் நீந்த அதிக நேரமாகும் என்றும் நாமறிவோம். நிற்கும் இடத்தில் இருந்து நண்பரை நோக்கி நேர்க்கோடாக ஓடியும் நீந்தியும் அவரை அடைவதா அல்லது நேராகக் கரையிலிருந்து குளத்தை நோக்கி ஓடி சாய்ந்த பாதையில் நீந்துவதா அல்லது சாய்ந்த பாதையில் ஓடி நேராக நீந்துவதா?

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வாக நமது மனதில் ஒரு தீர்மானம் இருக்கும்: மிகக் குறுகிய காலத்தில் அவரைக் காப்பாற்றியாக வேண்டும். பாதை எது என்பதல்ல.. நேரம் எவ்வளவு என்பது தான் குறி. எனவே குறைந்த நேரத்தில் அவரை அடைவதற்கான சரியான பாதை ஒன்றை நாம் தேர்வு செய்கிறோம். ஒளியும் இதைதான் செய்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
ஆச்சிமகன்
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?