<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

29.3.06

வேதாத்ரி மகரிஷி காலமானார் 

இன்றைய தினமணியில் வந்த இந்தச் செய்தி என்னைக் கலங்கச் செய்தது

கோவை, மார்ச் 29: ஆழியாறு அறிவுத் திருக்கோயில் நிறுவனர், வேதாத்ரி மகரிஷி (95) செவ்வாய்க்கிழமை காலமானார்.
3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.
மலச்சிக்கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு 10 நாள்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடல் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பின்னர் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
3 நாள்களுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்து, டயாலிஸிஸ் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இறந்தார். அவரது உடல் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
"திங்கள்கிழமை இரவுவரை சுயநினைவுடன் இருந்தார். செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பகல் 12.30-க்கு இறந்தார்' என்று கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறினார்.
| (5) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?